-
IPO பொதுப் பங்குகள் மூலம் திரட்டப்பட்ட ரூ.40,311 கோடி
இந்த காலண்டர் ஆண்டில் மே மாதம் வரை 16 நிறுவனங்களால் ஆரம்ப பொதுப் பங்குகள் மூலம் ரூ.40,311 கோடி திரட்டப்பட்டுள்ளது என்று ப்ரைம் டேட்டாபேஸ் தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் திரட்டப்பட்ட ரூ.17,496 கோடியை விட 43 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு இதுவரை 52 நிறுவனங்கள் தங்கள் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை (DHRP) சந்தைக் கட்டுப்பாட்டாளரிடம் தாக்கல் செய்துள்ளன. 2007-க்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.…
-
இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா
இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா அரியாசனத்தை விட்டு கொடுக்காத முகேஷ்… திருபாய் செய்த தவறில் இருந்து முகேஷ் கற்ற பாடம்… முகேஷ் அம்பானி தனது சாம்ராஜியத்தின் முக்கிய பகுதியான ஜியோவின் தலைவராக, தனது மகன் ஆகாஷ் அம்பானியை அறிவித்துள்ளார். இது முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகள் இடையே எந்த பிரச்சனையும் வந்து விடாமல் பார்த்து கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு தன் வாரிசுகளுக்கு மாற்றப்படும் என்ற பேச்சு…
-
இன்றைய(28.6.22) தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்
கடந்த சில நாட்களாகவே, தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்தோ, அல்லது குறைந்தோ வர்த்தகம் ஆகி வந்த நிலையில், இன்றும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 164 ரூபாய் என்ற அளவிலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து, 41 ஆயிரத்து 312 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது. அதே போல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ஆயிரத்து…
-
இந்திய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தில் சரிவுடன் இருந்த நிலையில், வர்த்தகத்தை நிறைவு செய்யும் போது, சற்று உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. காலையில் சரிவுடன் இருந்த சந்தை, ஐரோப்பிய சந்தைகளும், ஆசிய சந்தைகளும் சற்று அதிகரித்து வர்த்தகம் ஆனதால், மாலையில் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போதைய நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து, 53 ஆயிரத்து 177 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 18…
-
டாடா வாகனம் வாங்க போகிறீர்களா? கவனிக்கவும்
டாடா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தபோவதாக அறிவித்துள்ளது. இதன்படி டாடா நிறுவனம் விற்பனை செய்யும் வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலை ஜூலை 1ம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த விலை உயர்வானது, வாகனத்தை பொறுத்து 1.5 சதவிதம் முதல் 2.5 சதவிதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு வாகனத்தின் விலை 10 லட்சம் ரூபாய் என்றால், அதன் விலை சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி…
-
முகேஷ் அம்பானி பதவியை ராஜினாமா செய்தார்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். அந்த பதவியில் புதிய தலைவராக, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த முடிவு நேற்று அதாவது 27-6-22 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாக குழுவும் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த முடிவு குறித்து, ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் இருந்து பங்குச்சந்தைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், முகேஷ்…
-
இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் சந்தை நிலவரம்
இந்தியாவில் உள்ள வங்கிகள், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஆகியவற்றிற்கான சிறந்த காலாண்டைப் பதிவுசெய்துள்ளனர். அதே சமயம் மற்ற இடங்களில் ஒப்பந்தம் செய்வது மெதுவாக உள்ளது. HDFC வங்கி லிமிடெட், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் $60 பில்லியன் அனைத்துப் பங்குகளையும் வாங்கியதன் மூலம் இந்தியாவில் இந்த எழுச்சி ஆதிக்கம் செலுத்தியது. மைண்ட்ட்ரீ லிமிடெட் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ இன்ஃபோடெக் லிமிடெட் ஆகிய இரண்டு மென்பொருள் நிறுவனங்களின் கூட்டானது, பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ லிமிடெட்…
-
யெஸ் பேங்க் லிமிடெட் மறுசீரமைக்க திட்டம்
ஜவஹர் கோயல் நிர்வாக இயக்குநராக நீடிப்பதைத் தடுக்க டிஷ் டிவி இந்தியா லிமிடெட் பங்குதாரர்களில் பெரும்பான்மையானவர்களை கடந்த வெள்ளிக்கிழமை யெஸ் பேங்க் லிமிடெட் சமாதானப்படுத்த முடிந்தது. ஆனாலும் நிறுவனத்தின் ’ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷன்’ (AoA) மூலம் பாதுகாக்கப்பட்ட கோயல், நிர்வாகமற்ற இயக்குனராகத் தொடர்கிறார். கோயலை பதவி நீக்கம் செய்து, டிஷ் டிவியை மறுசீரமைக்க கிட்டத்தட்ட 10 மாதங்கள் போராடிய யெஸ் வங்கி, இப்போது இந்த பிரச்சினையில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI) அணுக திட்டமிட்டுள்ளது,…
-
NSE இணை இருப்பிட ஊழல் விசாரணை
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (NSE) நடந்த இணை இருப்பிட ஊழல் தொடர்பான விசாரணைகள், வர்த்தகர்களால் சந்தைக் கையாளுதலின் புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. பொதுவாக, இணை இருப்பிட சேவையகங்களுக்கான ஒரு வர்த்தக உறுப்பினர் ஒரு நொடிக்கு 40-1,000 ஆர்டர்களை அனுப்ப முடியும். வணிகர் அனுமதிக்கப்பட்டதை விட அதிக ஆர்டர்களை அனுப்பினால், மற்றவர்கள் உள்நுழைய முடியாது. இந்த நடைமுறை TAP-பைபாஸ் என குறிப்பிடப்படுகிறது. TAP பைபாஸ் தொடர்பான சந்தைக் கையாளுதல் வழக்கைத் தீர்ப்பதற்கு NSE இன் விண்ணப்பத்தை செபி நிராகரித்தது.…