Category: செய்தி

  • உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி

    ப்ளூம் பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆசியாவில் இருந்து ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும். கடந்த மாதம் 4 ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி, பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னார்டு வை இந்த மாதம் அதானி முந்தியுள்ளார். கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு 137பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. முதல்…

  • நியூ டெல்லி டெலிவிஷன் – எந்த தடையும் இல்லை

    அதானி குழுமத்திற்கு, நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) லிமிடெட்டின் விளம்பர நிறுவனமான RRPR ஹோல்டிங் லிமிடெட், நேரடியாக பங்குகளை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று செபியின் ’உள்ளக ஆலோசனை’ முடிவு செய்துள்ளது. இது என்டிடிவியின் கட்டுப்பாட்டிற்கான அதன் போரில் கெளதம் அதானி குழுமத்திற்கும், விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோருடனான செபியின் நிலைப்பாட்டை எளிதாக்கும்., கடன் ஒப்பந்தங்கள், அதன் உத்தரவுகள், செக்யூரிட்டிஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) உத்தரவுகள் மற்றும் NDTV மற்றும் அதன்…

  • தரவு மீறலுக்கு ஆளாகியுள்ள வோடபோன் வாடிக்கையாளர்கள்

    வோடபோன் ஐடியாவின் சுமார் 20 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், தரவு மீறலுக்கு ஆளாகியுள்ளனர் என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான CyberX9 தெரிவித்துள்ளது. இதுகுறித்து CyberX9 வெளியிட்ட அறிக்கையொன்றில், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் அழைப்பு நேரம், வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரி, SMS உள்ளிட்ட விவரங்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலை Vi நிறுவனம் மறுத்துவிட்டது. வாடிக்கையாளர் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது என்று Vi தெரிவித்தது.

  • தீபாவளி முதல் சென்னையில் 5ஜி சேவை

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45ம் ஆண்டு பொதுக்கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் ஆண்டு தீபாவளிக்கு சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் 5க் பிராட்பேண்ட் சேவை நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார். 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இதற்காக 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அனைவரும் 5ஜி சேவை…

  • துபாயில் உள்ள சொகுசு பங்களாவை வாங்கியது முகேஷ் அம்பானியா?

    பாம் ஜூமிராவில் உள்ள சொகுசு கட்டிடத்தை யார் வாங்கியது என்ற கேள்விக்கு விடை கசிந்திருக்கிறது. 80மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்த சொகுசு கட்டிடத்தை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்துக்காக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் 10படுக்கை அறைகள், ஸ்பா, உள்ளே, வெளியே என நீச்சல் குளங்கள் உள்ளன . ஆனந்த அம்பானிக்கு வாங்கப்பட்ட வீட்டுக்கு பக்கத்திலேயே ஷாருக்கான், டேவிட் பெக்காம் இன் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு 79மில்லியன் டாலர் மதிப்பில் பிரிட்டனில்…

  • இந்தியாவில் ஜூலையில் டீசல் ஏற்றுமதி 11%சரிவு

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெட்ரோலிய பொருட்கள் பற்றி பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வு அமைப்பான ppac கண்காணிக்கிறது. அதன் தரவுப்படி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 2 புள்ளி 45 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் சென்ற நிலையில் , மத்திய அரசு profit tax லிட்டருக்கு ரூபாய்6 விதித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த கச்சா எண்ணெய் குறைந்து 2.18மில்லியன் டன்னாக ஜூலையில் சரிந்தது. பெட்ரோல் ஏற்றுமதியில் கூட இதன் தாக்கம் இருந்தது. இந்த…

  • ரயில் பயணத்தின்போது உணவை டெலிவரி செய்யும் முறை

    ரயில் பயணத்தின்போது அமர்ந்திருக்கும் சீட்டுக்கே உணவை டெலிவரி செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது. Zoop என்ற இந்த வசதியை பெற 70420- 62070 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் உணவு ஆர்டர் குறித்து மெசேஜ் அனுப்ப வேண்டும். முதலில் 10 இலக்க PNR எண்ணை அளித்ததும் பெயர் விவரம் சரிபார்க்க படும் அடுத்த ஸ்டேஷனில் என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல் வாட்ஸ் ஆப்பிலேயே கிடைக்கும்.உணவுக்கான பணத்தை வாட்ஸ் ஆப்பிலேயே செலுத்திக்கொள்ளலாம் . உணவுப்பொருள் வாங்க வேறு…

  • 10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்களை அமைக்கிறது அதானி குழுமம்

    அதானி குழுமமும் அமெரிக்க நிறுவனமான connex நிறுவனமும் இணைந்து இந்தியாவில் data centres எனப்படும் தரவு மையங்களை அமைக்க உள்ளன. இவ்வகை தரவு மையங்கள் இயங்க தேவைப்படும் மின்சார அளவை வைத்து வகை படுத்த படுகிறது. தற்போது இந்தியாவில் 550மெகாவாட் data centre மட்டுமே உள்ளன. இந்த சூழலில் அடுத்த 10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்கள் அமைக்க பணிகள் நடப்பதாக அதானி connex நிறுவன துணைத்தலைவர் சஞ்சய் புதானி அறிவித்துள்ளார். இந்த மையங்கள் இந்தியாவில் சென்னை,…

  • நொய்டாவில் இரட்டை அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் 500 கோடி நஷ்டம்:சூப்பர் tech நிறுவனம்

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 40மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதன்படி நேற்று வானுயர கட்டிடங்கள் 9 நொடிகளில் தகர்ந்தது. கட்டிட இடிப்புக்கு 3ஆயிரத்து 700கிலோ வெடிமருந்து பயன்படுத்தியது. இது தொட ர்பாக சூப்பர் tech நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கட்டிடத்தை இடிக்க 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறபடுகிறது. நேற்று த்கர்க்கப்பட்ட மொத்த மதிப்பு 700 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதி…

  • மெய் நிகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்

    ரிலையன்ஸ் நிறுவனம் 45 ம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று பகல் 2மணிக்கு நடக்கிறது. இன்றைய கூட்டத்தை 5சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதும் இந்த கூட்டத்தில் 5ஜி குறித்த அறிவிப்பு கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், அடுத்தகட்ட முதலீடுகள் குறித்தும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவை தவிர ரிலையன்ஸ் குழுமம் அடுத்ததாக அடி எடுத்து வைக்க உள்ள ஹைட்ரஜன் திட்டம், சோலார் திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு…