-
காப்புரிமை விதிகளை மாற்றுகிறது ஐஆர்டிஏஐ…
இந்தியாவில் காப்புரிமை ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது IRDAI. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள காப்புரிமை நிறுவனங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது. புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட்டல் மயப்படுத்த அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து 20ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது E-proposal படிவம் முக்கியம் என்பதை இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது மின்னணு காப்புரிமை திட்டங்களில் சலுகை வழங்க வேண்டும் என்றும்,ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்தும் கருத்துகள்…
-
எலான் மஸ்கின் புதிய அறிமுகம்…
டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருடன் ஆப்டிமஸ் என்ற ரோபோவும் உடன் வந்தது. இது இணையத்தில் பலராலும் பேசப்படும் செய்தியாக மாறியது. இதுகுறித்து எலான் மஸ்க் தெரிவிக்கும்போது அந்த ரோபோவுக்கு பெயர் ஆப்டிமஸ் என்றும் விரைவில் ஸ்மார்ட்டான ரோபோக்களை தங்கள் நிறுவனம் உலகளவில் அதிகம் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். கார்கள் உற்பத்தியில் தனித்துவமாக இருக்கும் எலான் மஸ்க் தனது கனவு திட்டமான ஓட்டுநரில்லா தானியங்கி…
-
இந்திய நிறுவனத்துக்கு தடை விதித்த அமெரிக்கா
மும்பையை சேர்ந்த தி பாலாஜி பெட்ரோ கெம் பிரைவேட் என்ற நிறுவனம் ஈரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல்கள், மெத்தனால் மற்றும் பேஸ் ஆயில் ஆகியவற்றை ஈரானில் இருந்து வாங்கியுள்ளதாகவும்,சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிர்ல்லியன்ஸ் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மூலமாக திபாலாஜி நிறுவனம் இந்த எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது இந்திய நிறுவனம் மட்டுமின்றி மொத்தம் 8 நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அவை, ஐக்கிய அரபு அமீரகம்,ஹாங்காங் மற்றும்…
-
மின்சார உதிரி பாக உற்பத்தியை கண்காணிக்கிறது மத்திய அரசு !!!
FAMe -2 என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதன் மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாயாகும். மின்சார வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தரவுகளை இந்த அமைப்பு பதிவிறக்கம் செய்யும். இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கும் மானியம் சரியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும் என கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பதிலாக இந்திய நிறுவனங்களை இந்த துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை மத்திய அரசு…
-
தொடர்ந்து சரியும் கையிருப்பு!!!
மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பணம் குறித்த நிலை அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற நாடுகளின் பணம் கடந்த 23ம் தேதி வரை 537.51 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அளவு இதற்கு முன்பு இருந்ததை விட 8.1 பில்லியன் குறைவாகும். நாட்டில் உள்ள வெளிநாட்டு பண கையிருப்பு குறைந்துள்ளதன் மூலம் FCAஎனப்படும் வெளிநாட்டு பண சொத்து மதிப்பு 477பில்லியன் டாலராக சரிந்துள்ளது அதேபோல…
-
வோடபோன் நடத்தும் சமரச பேச்சுவார்த்தை…
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் தங்கள் சேவையை வழங்கும் டவர்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு கூட பணம் தர முடியாமல் உள்ளதாக தகவல் வெளியாகின. அதாவது மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயை சேவைக்கட்டணமாக வோடபோன் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் பணத்தை அளிக்காவிட்டால் சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த…
-
மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரித்த ரிசர்வ் வங்கி…
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். ரெபோ விகிதம் எனப்படும் இந்த வரி உயர்வு காரணமாக வாகனம், வீட்டுக்கடன், தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தவே ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது ரிசர்வ்…
-
விரைவில் H,L பிரிவு விசாக்களுக்காக 1 லட்சம் அப்பாய்ண்ட்மெண்ட்கள்..
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கச் செல்ல மாணவர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் மற்றும் வியாபார நோக்குடன் பயணிப்பவர்களுக்கு B1,B2 ரக விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு செல்வோருக்கான விசாக்களை பரிசீலித்து அங்கீகாரம் அளிக்கும் பணியாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக குறைக்கப்பட்டது.கொரோனா பெருந்தொற்றால் அமெரிக்க தூதரங்களில் இந்த சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா சூழல் கிட்டத்தட்ட நிறைவுற்ற நிலையில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த…
-
ஷேர் பைபேக் அறிவிக்க உள்ள இன்போசிஸ் நிறுவனம்..
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் நிதிநிலை அறிக்கை மற்றும் இரண்டாம் காலாண்டின் செயல்திறன் குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்தும், பங்குகளை நிறுவனமே திரும்ப வாங்கிக்கொள்ளும் நடைமுறை குறித்தும் தகவல் கசிந்துள்ளது. அதன்படி இன்போசிஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டு அறிவிப்பில் ஷேர் பைபேக் எனப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஷேர் பைபேக் எனப்படுவது யாதெனில், நிறுவன வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் பங்குச்சந்தைகளில் அளித்த முதலீடுகளுக்கு பதிலாக…