-
பி.எம்.கேர்ஸ் – தொடரும் மர்மம்..
கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் பொதுநிதி நிதி என்ற அமைப்பு இருக்கையில் பிஎம்கேர்ஸை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் பிரதமரை தலைவராக கொண்டு செயல்படும் பிஎம்…
-
என்ன!!! 7லட்சம் கோடியா ?
உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளன பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 7 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் இந்திய பங்குகளின் மதிப்பு 269.86லட்சம் கோடியாக சரிந்துள்ளது அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன்களுக்கான வட்டியை மேலும் ஒரு முறை விலையேற்றம் செய்து அறிவிக்க…
-
டாடாவின் தந்திரம்…
டாடா குழுமத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன இவற்றில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட 15 நிறுவனங்களை மட்டும் பட்டியலிட அந்த குழுமம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக மொத்தம் 29 நிறுவனங்களை பட்டியலிட்டு முதலீடுகளை ஈர்க்க அந்த குழுமம் திட்டமிட்டது ஆனால் தற்போது அந்த முடிவை பாதியாக டாடா குழுமம் குறைத்துக்கொண்டுள்ளது. வியாபாரத்தில் நிலவும் போட்டியை சமாளிக்கவும், இருக்கும் நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அந்த குழுமத்தின்…
-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை…
-
இனி சாப்பாடு, மளிகைப் பொருட்கள் பறந்து வரும்…
இந்தியாவில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டம் விரைவில் குருகிராம் அல்லது பெங்களூருவில் துவங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேல் வாஸ் சென்னையில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டத்தில் பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த சேவையை செய்ய உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் இந்தமுயற்சிக்காக பல்வேறு டிரோன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருடா நிறுவனம் ஸ்விக்கியுடன் கைகோர்த்து முதல் டிரோன் சேவையை செய்யும்…
-
கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை மற்றும் மின்வணிக நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வரும் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளை விட மேலாண்மை படிப்பு படித்தவர்களை எடுக்கத்தான் நிறுவனங்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் பல ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆரம்ப…
-
இதோ வந்திருச்சு 5 ஜி..
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில் இந்திய மொபைல் காங்கிரஸ் எனும் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், வோடபோன் நிறுவனத்தின் ரவீந்திர டக்கர் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தகவல்…
-
இந்திய ரூபாயின் மதிப்பு பிற நாடுகளை விட சிறப்பாக உள்ளது:நிர்மலா சீதாராமன்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், உலகளவில் அமெரிக்க டாலருக்கு நிகராக அனைத்து நாடுகளின் பணங்களின் மதிப்பும் சரிந்துவருவதாக கூறினார். மேலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சிறப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறநாடுகளைப்போல இல்லாமல்…
-
கடன் வசூல் செய்யும் முகவர்கள் மீது ரிசர்வ் வங்கி காட்டம்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில் அண்மையில் ஹசாரிபாக் பகுதியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயி கடனை திரும்பி செலுத்தவில்லை என்பதால் டிராக்டரை கடன் வசூலிக்கும் முகவர் எடுத்துச்சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் கர்ப்பிணி மனைவி டிராக்டர் ஏற்றிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து கடன் வழங்கிய மகேந்திரா நிறுவனம் மூன்றாம் நபர்களை வைத்து கடன் வசூலிக்க ரிசர்வ்…