-
“ஒழுங்குமுறைப்படுத்தப்படாத “டெரிவேட்டிவ்” நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம்” – பங்குச் சந்தை வணிகர்களுக்கு, இந்திய பங்குச் சந்தைகள் விடுக்கும் எச்சரிக்கை
“டெரிவேட்டிவ்” என்பது சொத்து, குறியீடு, பொருள் அல்லது வட்டி போன்றவற்றின் அடிப்படையிலான சந்தை செயல்திறனில் இருந்து அதன் மதிப்பைப் பெறும் ஒரு ஒப்பந்தமாகும். இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டெரிவேட்டிவ் நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம் என எச்சரித்திருக்கிறது, குறிப்பாக “பைனரி ஆப்ஷன்ஸ்” மற்றும் “காண்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்” (CFD) போன்ற திட்டங்களை குறித்து பங்குச் சந்தைகள் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. வழக்கமான பங்குச் சந்தையில் பரிவர்த்தனை…
-
₹40,000 கோடியை திரட்ட ஒப்புதல் கோரும் டாடா சன்ஸ்! ஏன்?
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலை கோரியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இணையவழி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 14 அன்று பங்குதாரர்கள் இந்த முன்மொழிவுக்கு வாக்களிக்கயிருக்கிறார்கள். இந்த தீர்மானம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், நிறுவனம் அதன் வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவைப்படும்போது சந்தையின் வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள இந்த தொகை…
-
அதானி வில்மரின் ₹4,500 கோடி IPO-வை தற்காலிகமாக நிறுத்தி வைத்த SEBI!
-
HDFC – வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது – ஏன்? எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC யின் சில குறிப்பிட்ட ஆன்லைன் சேவைகள் 18 மணி நேரம் இயங்காது என்று அறிவித்திருக்கிறது, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 9 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3 மணி வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் இயங்காது என்று வங்கி அறிவித்திருக்கிறது, தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையொன்றில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர் சேவைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வரும்…
-
வங்கிக் கடன் மோசடி: “கார்வி” நிறுவனத் தலைவர் கைது!
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, “இண்டஸ்இண்ட்” வங்கியின் மூலம் வாங்கிய கடன் தொகையை தன்னுடைய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடை மாற்றி இருப்பதாக காவல்துறை இணை ஆணையர் (புலனாய்வுத் துறை) அவினாஷ் மொஹந்தி தெரிவித்தார். “இண்டஸ்இண்ட்” வங்கி அளித்திருக்கும் புகாரில், கார்வி நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் பிணைகள் மற்றும் பங்குகளை உரியவர்களின்…
-
என்னது எலக்ட்ரிக் காரும் வருதா? ஓலா கிட்ட இருந்து? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
-
IPO மோகம்: பில்லியன்களை இந்தியாவுக்குள் கொட்டும் முதலீட்டாளர்கள்!
-
வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு, ஆதாரை இணைப்பது கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு
வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என்று வரிசையாக ஆதாரை இணைத்ததன் தொடர்ச்சியாக இப்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு (Provident Fund Account) ஆதார் இணைக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு வைத்திருப்பவர்கள், இனி வரும் காலங்களில் பணம் எடுப்பது, ஓய்வூதியம் பெறுவது மற்றும் காப்பீட்டுப் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் விவரங்களை உங்கள் கணக்குடன் இணைப்பது அவசியம். நிறுவனங்கள் அல்லது முதலாளிகள், தங்கள் பணியாளர்களின் ஆதார் எண்ணை…
-
சந்தை மூலதனத்தில் ₹ 13 ட்ரில்லியன் அளவைக் கடந்த TCS !
“டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்” (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021) அன்று பங்குச் சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது புதிய உச்சத்தை எட்டியதற்குப் பிறகு இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. டாடா குழுமங்களின் ஒரு அங்கமான TCS நிறுவனத்தின் பங்கு, கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து, சென்ற செவ்வாய்க்கிழமை சந்தை முடிவுறும்…