-
மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் வணிகம் !
பல மாநிலங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்காக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை இணையவழி தளங்களில் அதிகரித்துள்ளது. கடைகளில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தினால் நுகர்வோர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இது அதிக ஆன்லைன் விற்பனைக்கு பங்களித்துள்ளது என்று பல நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
2022 – அதிகரிக்கும் FMCG பொருட்களின் விலை !
இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
-
தொடர்ந்து விலையேற்றம் காணும் நுகர்வோர் பொருட்கள் !
இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு மூன்று முறை ஏற்றம் கண்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலையேற்றத்துக்கு தயாராகி வருகின்றன. வாகனப் போக்குவரத்து செலவு.மற்றும் சப்ளைகளில் உள்ள முடக்கங்கள் காரணமாக விலைகள் ஏறுவதாக விளக்கங்கள் கூறப்பட்டன, எஃப் எம் சி ஜி பொருட்கள் 4லிருந்து 10 சதவீதமாக தங்கள் பொருட்கள் மீதான விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அதன் விற்பனை சரியலாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த…