-
ஏர் இந்தியாவின் 50 % நிதியைத் கைப்பற்ற தேவாஸ் மல்டிமீடியாவுக்கு கனடா நீதிமன்றம் அனுமதி!
உலகளாவிய விமான நிறுவனமான IATA வசம் உள்ள ஏர் இந்தியாவின் 50 சதவீத நிதியைத் கைப்பற்ற தேவாஸ் மல்டிமீடியா பங்குதாரர்களுக்கு கனேடிய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேவாஸ் மல்டிமீடியா பங்குதாரர்கள் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வைத்திருந்த ஏர் இந்தியா மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) ஆகியவற்றின் நிதியை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.