அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.