நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.