Category: தொழில்துறை

  • இந்த ஸ்மால்-கேப் பங்குகளை கொஞ்சம் கவனியுங்கள்!

    ஆரியன் புரோ சொல்யூசன்ஸ் உத்தரப் பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கீழ் இயங்கும் கான்பூர் மெட்ரோ திட்டத்திற்கான சேவை வழங்கும் நிறுவனமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் ஆரியன்புரோ சொல்யூசன்ஸ். இந்த நிறுவனம் என்சிஏம்சி முறையில் நவீன தானியங்கி கட்டணம் சேகரிக்கும் சேவை மற்றும் பராமரிப்பை உள்ளடக்கிய சேவையை 10 வருடத்திற்கு நடத்தி தர வேண்டும். இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய். சபூ சோடியம் குளோரோ டபுள் டோட்டா…

  • 09/12/2021 – வீழ்ச்சியில் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 177 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 58,473 இல் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 182 புள்ளிகள் அதிகரித்து 58,831 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55 புள்ளிகள் அதிகரித்து 17,524 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 47 புள்ளிகள் அதிகரித்து 37,332 ஆகவும் வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 58,831.41 58,649.68 (+) 181.73 (+)…

  • ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் டிவிடெண்ட் அறிவிப்பு !

    ஹிந்துஸ்தான் சிங்க் முதலீட்டாளர்களின் ஒரு பங்குக்கு Rs.18 இன்ட்டெரீம் டிவிடெண்டை அறிவித்திருக்கிறது, இதற்கான பதிவு தேதியாக டிசம்பர் 15 இருக்கும், ஒட்டுமொத்தமாக Rs.7605 கோடி முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட்டாக வழங்கப்படும், இதில் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு Rs.4938 கோடியும், மத்திய அரசுக்கு Rs.2250 கோடியும் கிடைக்கும். இந்துஸ்தான் சிங்க் லிமிடெட் (ஹெச்எஸ்எல்) இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது இந்தியாவில் துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை சுரங்கத் தொழில் மூலம் பிரித்தல் மற்றும் உருக்குதலில்…

  • அதிகம் எதிர்பார்க்கப்படும் நான்கு நட்சத்திர IPO க்கள் !

    இந்தியப் பங்குச் சந்தைக்கு 2020-21 நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இன்னும் முடிவடையவில்லை. பங்குச்சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் பெற்று புதிய உச்சத்தை அடைந்தது. பெரும்பாலான ஐபிஓக்கள் நல்ல லாபத்தை பெற்றன. பேடிஎம், ஃபின் பேமெண்ட்ஸ் வங்கி, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ், கார் டிரேட் போன்ற சில பங்குகள்…

  • மெட்டல் மற்றும் வங்கி பங்குகளின் உயர்வு !

    நேற்று இந்திய பங்குச்சந்தை நேர்மறையான குறிப்பில் முடிந்தது. பிஎஸ்இ மெட்டல் 3.20 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்துடன் நிறைவடைந்தன. ஐசிஐசிஐ வங்கி , எச்டிஃஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற பங்குகள் நிஃப்டியின் உயர்வுக்கு வழிவகுத்தன. அதேசமயம் ஏஷியன் பெயிண்ட் பங்குகள் நிஃப்டியின் சரிவுக்கு காரணமாக அமைந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக அமர்வில் எஸ் அண்ட் பி,பிஎஸ்இ மெட்டல், எஸ் அண்ட் பி பிஎஸ்இ எண்ணெய் மற்றும் வாயு உள்ளிட்ட…

  • ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை – இந்திய ரிசர்வ் வங்கி!

    அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் ரெப்போ ரேட் உள்ளிட்ட நிதி விகிதங்களை உயர்த்தவில்லை. ரெப்போவுக்கும், ரிவர்ஸ் ரெப்போவிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் அதுவும் நடக்கவில்லை. உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் அந்தந்த நாட்டின் பொருளாதார பணவீக்கம் குறித்து கவலைப்படுகின்றன. ரிசர்வ் வங்கியும் பணவீக்க நிலைமையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பணவீக்கத்துக்கு எதிராக எந்த விதமான ‘இறுக்கமான’நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான…

  • “ரேட்கெய்ன்” – IPO – சலுகை விலை எவ்வளவு?

    ரேட்கெய்ன் டிராவல் டெக்னாலஜிஸ் லிமிடெட் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முகமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூபாய் 1,335.70 கோடியை திரட்டுவதற்காக ஐபிஓ வெளியீட்டைத் துவங்கி வைத்தது. இந்த ஐபிஓ நாளை முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை 405 ரூபாயில் இருந்து 425 ரூபாய் வரை இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு பிந்தைய ஈக்விட்டி பங்கு மூலதனம் 29.44 சதவீதம் இருக்கும் என்றும், நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் 56.2 சதவீதத்தை வைத்திருப்பார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ரேட்கெய்ன் நிறுவனம், கடந்த இரண்டு…

  • வெளியாகிறது “மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்” – IPO !

    இந்தியாவின் முன்னணி மருந்தக நிறுவனமான மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் தனது ஐபிஓவை 13ந் தேதி வெளியிடுகிறது. பங்கின் ஆரம்ப விலையாக 780 லிருந்து 796 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது. மெட்பிளஸ் மொத்தம் 1398.29 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக 600 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும் , ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 798.29 கோடி ரூபாயையும் திரட்ட முடிவு செய்துள்ளது. பிஐ ஆப்பர்சூனிட்டி ஃபண்ட் 1 தன்வசமுள்ள 623 கோடி ரூபாயையும், எஸ்எஸ் ஃபார்மா…

  • சிட்டி – இந்தியாவின் சொத்துக்களை கைப்பற்றப் போவது யார்?

    சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. சிட்டி இந்தியா வங்கியின் சொத்துக்கள் அனைத்தும் சுமார் 2 பில்லியன் டாலர்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அனைத்தும் பணப் பரிவர்த்தனையாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஒப்பந்தத்தின் வரையறைகளை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இரண்டு வங்கிகளும் கூடுதல்…

  • ரிலையன்ஸை எதிர்க்கும் இந்திய வணிகர்கள் ! என்ன காரணம்?

    இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸை எதிர்த்து சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளினால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது. வர்த்தக இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வீட்டு உபயோக பொருட்களை நேரடியாக தயாரிப்பாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி தனது நேரடி விற்பனை கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் லாபமீட்டி வருகின்றன. ஆனால் நடுவில் இருக்கும் சிறு வணிகர்களின் விற்பனை 20லிருந்து 25…