வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு


யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஹச்.டி.எப்.சி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஸ்டிரா என பெரும்பாலான வங்கிகள், தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தை தொடர்ந்து, கடன்கள் மீதான வட்டி உயர தொடங்கியது.

இந்நிலையில், வங்கியில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் எப்போது அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பொதுத்துறை, தனியார் வங்கிகள் என்று பெரும்பாலான வங்கிகள் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு வங்கியும், தங்களின் சேமிப்பு கணக்கு திட்டங்களில், பல்வேறு வகையில் வட்டி விகித மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. சில வங்கிகள், மற்றவர்களுக்கு காட்டிலும், மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகப்படியாக வட்டி விகித்தை அதிகரித்து இருக்கின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை அதிகரித்த உடன், கடன்களுக்கான வட்டி விகிதம் ஒரு புறம் உடனடியாக அதிகரிக்கப்பட்டலும், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை தற்போது வங்கிகள் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


70 responses to “வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *