-
12 பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ரூ.6,651 கோடி இடைக்கால ஈவுத்தொகை !
மத்திய அரசு, 12 பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து இடைக்கால ஈவுத்தொகையாக திங்களன்று ரூ.6,651 கோடியை பெற்றுள்ளது, இது நடப்பு நிதியாண்டில் ரூ.50,028 கோடி ஈவுத்தொகை இலக்கை எட்டியுள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (பிஜிசிஐஎல்) அரசுக்கு ஈவுத்தொகைத் தொகையாக ரூ. 2,506 கோடியை செலுத்தியுள்ளது, அதே நேரத்தில் என்எம்டிசி மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முறையே ரூ.1,605 கோடி மற்றும் ரூ.972 கோடி இடைக்கால ஈவுத்தொகையாக செலுத்தியுள்ளன.
-
கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக 33,479 கோடி ரூபாயை இந்திய அரசு பெற்றது. இதைப்போலவே டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியும், இர்கான் (IRCON) நிறுவனத்தில் இருந்து 48 கோடி ரூபாயும், ரைட்ஸ் நிறுவனத்தில் இருந்து (RITES) 69 கோடியும், NIIFL நிறுவனத்தில் இருந்து…