கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !


பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக 33,479 கோடி ரூபாயை இந்திய அரசு பெற்றது. இதைப்போலவே டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியும், இர்கான் (IRCON) நிறுவனத்தில் இருந்து 48 கோடி ரூபாயும், ரைட்ஸ் நிறுவனத்தில் இருந்து (RITES) 69 கோடியும், NIIFL நிறுவனத்தில் இருந்து 23 கோடி ரூபாயும் தவணைத் தொகையாக பெற்றுக் கொண்டது என ட்விட்டரில் மத்திய அரசின் முதலீடுகள் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் செயலாளர் (DIPAM) துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார்.

மத்திய அரசு இதுவரை பங்கு விலக்கல் மற்றும் தவணைத்தொகை பெறுதல் முறையில் 42,809.48 ஆயிரம் கோடியைப் பெற்றது. அதில் என் எம் டி சி, ஹட்கோ, மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் மூலமாக மட்டும் 9,329.9யை பெற்றது. வரும் வருடம் முடிவதற்குள் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக பிபிசிஎல் (BPCL), பிஈஎம்எல் (BEML), ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து பங்குவிலக்கல் மூலமாக 1,75 கோடி ரூபாயை எதிர்பார்க்கிறது.


386 responses to “கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *