-
வாட்ஸ்ஆப் குரூப்பில் உறுப்பினர்களின் எண்ணிக்கை விரைவில் 1024 ஆகிறது….
உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் மொபைல் செயலியாக உள்ளது வாட்ஸ் ஆப். இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது. விரைவில் இது இரட்டிப்பாகி ஆயிரத்து 24 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது மட்டுமின்றி வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேருக்கு தகவல் சென்று சேரும் வகையில் புதிய அப்டேட்களையும் வாட்ஸ்ஆப் அடுத்தடுத்து வெளியிட உள்ளது. இந்த சூழலில் டெலிகிராம் நிறுவன…
-
வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது இல்லையா ??
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமாக இருப்பவர் பாவெல் துரோவ். இவர் அண்மையில் ஒரு பரபரப்பு பதிவை செய்திருந்தார். அதில் வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ஹேக்கர்கள் மிக எளிதில் தரவுகளை அனுக முடிவதாகவும் கூறி அதிரவைத்துள்ளார். உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், ஒரே ஒரு வீடியோகால் லிங்க் மூலம் ஹேக்கர்கள் மிக எளிதாக வாட்ஸ் ஆப் செயலிக்குள் புகுந்து தரவுகளை திருட…
-
வாட்ஸ்ஆப்,சிக்னல் செயலிகளுக்கு கட்டுப்பாடு…
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைதொடர்பு சட்டங்களில் மத்திய அரசு விரைவில் மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இதற்கான பிரத்யேக சட்ட முன்வடிவையும் மத்திய அரசு வடிவமைத்து வருகிறது. அதன்படி வாட்ஸ் ஆப்,சிக்னல் மற்றும் பிற ஓடிடி தளங்களின் தரவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வர உள்ளன. குரல்,வீடியோ,இணையதள தகவல் பரிமாற்றத்தையும் இந்த புதிய சட்டம் கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளது. தேவை ஏற்பட்டால் பிற செயலிகளையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக…
-
வாட்ஸ் ஆப்பில் இது புதுசு!!!
கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஆப்பாக உள்ளது வாட்ஸ் ஆப். சீரான இடைவெளியில் புதுமைகளை புகுத்தி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் வாட்ஸ் ஆப் புதிய வசதியை பரிசோதித்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சாட்டிங்கில் உள்ள தரவுகளை தேதியை மட்டும் வைத்து தேடும் வசதியை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது. இந்த வசதியை 2020ம் ஆண்டே வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த்து. எனினும் சற்று தாமதமாக விரைவில் இது பயன்பாட்டுக்கு வருகிறது.…
-
விரைவில் புதிய Privacy Controls உடன் Whatsapp
வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்தார். சமீபத்திய வாட்ஸ்அப் புதுப்பிப்பில், இப்போது யாரையும் எச்சரிக்காமல் – அமைதியாக இந்தக் குழுக்களிலிருந்து வெளியேறலாம். வெளியேறும் அறிவிப்பு அரட்டையில் பாப்-அப் செய்யவில்லையே என்பதைத் தவிர, செயல்முறை ஒரே மாதிரியாக இருக்கும். மற்றொரு புதுப்பிப்பில், இரண்டு நாட்களுக்குப் பிறகும் உங்கள் செய்திகளை நீக்கவும். WhatsApp உங்களை அனுமதிக்கும். புதிய அம்சங்கள் இங்கிலாந்தில் தொடங்கி இந்த மாதம் வெளியிடப்படும்.
-
புதிய வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது வாட்சாப்
வாட்சாப்பில் ஆன்லைன் ஸ்டேட்டஸை தனது குழுவில் உள்ள நபர்களோ அல்லது தனது தொடர்புகளில் உள்ள நபர்களிடமிருந்தோ மறைக்க ஒரு புதிய வசதியை வாட்சாப் அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி அனைத்து வாட்சாப் தொடர்புகளும் அல்லது கடைசியாக இருந்த நேரத்தை புதியதாக அறிமுகப்படுத்திய இரண்டு தொழில்நுட்ப அம்சத்தில் அனைவரும் பார்க்க இயலும், ’எனது கான்டாக்ட் தவிர’ என்ற ஆப்ஷனை நீங்கள் தெரிவு செய்யும்பட்சத்தில் உங்களுக்கு தேவையில்லாதவர் அதைப் பார்க்க அனுமதி இல்லை. ’தேவைப்படாத நபர்கள்’ என்ற புதிய ஆப்ஷனில் உங்கள்…
-
இனி வாட்சப் வழியாகவும் செபியின் (SEBI) சம்மன் வரலாம் !
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.