Category: செய்தி

  • கச்சா எண்ணெய் சரிந்தும் விலை உயர்ந்த எரிவாயு

    கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கி உள்ள நிலையில், சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை இன்று ஒரே நாளில் 9 டாலர் அளவிற்கு சரிந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில், இந்தியாவில் எரிபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 3 முறை எரிவாயு சிலிண்டரின்…

  • இன்று சந்தை உயர காரணம் என்ன?

    இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஒரு சதவிதம் அளவிற்கு உயர்த்துள்ளது. இன்றைய வர்த்தக் நேர முடியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 616 புள்ளிகள் அதிகரித்து 53 ஆயிரத்து 751 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 179 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 999 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இன்று அதிகரித்தது, கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9 டாலர் வரை சரிந்து 102.77 டாலராக குறைந்தது, போன்றவை…

  • ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டிஸ்

    ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களில் தொடர்ந்து, ஏதேனும் ஒரு கோளாறு ஏற்பட்டு வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் அளிக்க விமான போக்குவரத்துத்துறை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் கடந்த மூன்று வாரத்தில் 8 முறை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. நேற்று டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் எரிபொருள் கசிவு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கராச்சியில் தரையிறங்கியது. குஜ்ராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற…

  • கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல் விலை இறங்குமா?

    ஜூலை 5 அன்று எண்ணெய் விலையில் சரிவு தொடர்ந்தது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய்க்கு $99.76 ஆகக் $8.67 சரிந்தது. மே 11ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக $100-க்கு கீழே வர்த்தகம் செய்யப்பட்டது. ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் $106.85 ஆக இருந்தது. உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் விலையை, இறுக்கமான விநியோகம் மற்றும் வலுவான தேவைக்கு மத்தியில், சாதனை…

  • தொடர்ச்சியாக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு

    உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல், சென்னையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.1068.50 ஆக அதிகரித்து இருக்கிறது. மற்ற முக்கிய இந்திய நகரங்களில் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. (பெருநகரங்களில் Indane இன் மானியமில்லாத விலை – ரூ./14.2 கிலோ சிலிண்டர்) டெல்லி – ரூ.1,053மும்பை – ரூ.1,052.50கொல்கத்தா – ரூ.1,079சென்னை – ரூ.1068.50

  • ஜவுளித்துறை : இந்திய ஜவுளிகளின் தேவை குறைந்துள்ளது

    அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் சிறந்த ஏற்றுமதி சந்தைகளில் திரைச்சீலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் போன்ற பொருட்களுக்கான தேவைகள் குறைந்துள்ளதால், இந்திய ஜவுளிகளின் தேவை குறைந்துள்ளது என்று ஜவுளித்துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்தார். அவர் கூறுகையில் முதல் சுற்றில் குறைந்த பலன்கள் கிடைத்ததால், ஆடைகள் மற்றும் ஆடைகளின் உற்பத்தியை அதிகரிக்க, ஜவுளியில் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையின் (PLI) இரண்டாம் கட்டத்தை அரசாங்கம் விரைவில் தொடங்கும் என்றார். பலவீனமான ரூபாய் மற்றும் பருத்தி விலையை தளர்த்துவது இந்தியாவின் போட்டித்தன்மையை…

  • கிரிப்டோகரன்சி – நோட்டீஸ் அனுப்பியது அமலாக்க இயக்குனரகம்

    கிரிப்டோகரன்சி நிறுவனங்களிடமிருந்து அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் கூடுதல் தகவல்களைக் கோரி அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் (ED) அனுப்பியுள்ளது. கிரிப்டோ வர்த்தக தளமான CoinDCX இன் நிறுவனர் சுமித் குப்தாவை இந்த மாத தொடக்கத்தில் அதன் பெங்களூரு அலுவலகத்தில் அமலாக்க இயக்குநரகம் விசாரித்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரித்துறை உட்பட பல ஏஜென்சிகள் கிரிப்டோ நிறுவனங்களை விசாரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஃபெமா விதிகளை மீறியதாகக் கூறப்படும் கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட…

  • நிலுவையில் உள்ள வீட்டுக் கடன் உச்சத்தை எட்டியது – RBI

    வீட்டுக் கடன் தொடர்பாக நிலுவையில் உள்ள கடன்கள் மே மாதம் 0.15% உயர்ந்து ₹17.1 டிரில்லியன் ஆக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட தரவு காட்டுகிறது. ஜூன் மாதத்திற்கான தரவு இந்த மாத இறுதிக்குள் மட்டுமே கிடைக்கும். ஆறு மாதங்களில் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 1%க்கும் குறைவாகக் குறைவது இதுவே முதல் முறை. வீட்டுக் கடன்களின் வளர்ச்சி விகிதம் மார்ச் மாதத்தில் உச்சத்தை எட்டியது, அது முந்தைய மாதத்தை விட 6.7%…

  • சரக்கு மற்றும் சேவை வரிகளும், முரண்பாடுகளும்!

    முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தற்போதைய சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்திய விதமே தவறு என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். 5%, 12%, 18%, 28% என்று பல விதங்களில் வரிகள் இருக்க கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், அண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி குறித்து பேசிய வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ், இந்தியாவில் ஒரே ஒரு குறிப்பிட சதவிதத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வருவது தற்போதைய…

  • இன்றைய (05 July, 2022) பங்குச்சந்தை நிலவரங்கள்

    இன்று காலை இந்திய பங்குச்சந்தைகள் 400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகம் ஆன நிலையில், வர்த்தகத்தின் இறுதியில், சரிவுடன் பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. இன்று காலை, ஆசிய பங்குச்சந்தைகள் உயர்ந்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்திக்க தொடங்கின. இதற்கு எதிர்வர கூடிய நிறுவனங்களின் முடிவுகள் குறித்த அச்சம் ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 37…