ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டிஸ்


ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களில் தொடர்ந்து, ஏதேனும் ஒரு கோளாறு ஏற்பட்டு வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் அளிக்க விமான போக்குவரத்துத்துறை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் கடந்த மூன்று வாரத்தில் 8 முறை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. நேற்று டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் எரிபொருள் கசிவு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கராச்சியில் தரையிறங்கியது.

குஜ்ராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் முன்பக்க கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மும்பையில் அவசரமாக தரை இறங்கியது. இதேபோல கொல்கத்தாவில் இருந்து சீனா சென்ற சரக்கு விமானத்தில், ரேடார் பழுது ஏற்பட்டதால் மீண்டும் கொல்கத்தா திரும்பியது. ஒரேநாளில் அந்நிறுவனத்தின் மூன்று விமானங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *