சாமியார் பிடியில் NSC – CBI பிடியில் சித்ரா ராமகிருஷ்ணா..!!


தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

முடிவுகள் எடுத்த முகம் தெரியாத சாமியார்:

2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய  வந்துள்ளது. 

மேலும் இந்த சாமியாரின் உத்தரவின்பேரில், சித்ரா ராமகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த  ஆனந்த் சுப்ரமணியனை 2013-ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில்  NSE-யின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தார். படிப்படியாக ஆனந்த் சுப்ரமணியத்தின் ஊதியம் அதிகரிக்கப்பட்டு, 2015-ம் ஆண்டில் 5 கோடியை எட்டியது. அத்துடன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும், வசதிகளும் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு தரப்பட்டன.  இதில் முறைகேடுகள் நடந்ததாக செபி தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

3 பேருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்:

அதன்படி, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனந்த் சுப்பிரமணியத்தின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. இதனிடையே மும்பையில் விசாரணை நடத்திய சிபிஐ,  ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் ரவி நரேன் (என்எஸ்இயின் முன்னாள் நிர்வாக இயக்குநர்) ஆகியோருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *