புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு ஆலையை ஆந்திராவில் நிறுவுகிறது கிரீன்கோ குழுமம்


கிரீன்கோ குழுமம் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு ஆலையை ஆந்திராவில் நிறுவுகிறது என்று அதன் இணை நிர்வாக இயக்குனர் மகேஷ் கொல்லி தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திட்டத்தின் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

திட்டத்தின் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், 5,230 மெகாவாட் (MW) திட்டம் 3 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படுகிறது, இத் திட்டத்திற்காக உலகளாவிய எஃகு தயாரிப்பாளரான ArcelorMittal சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 5,230 மெகாவாட்களில், 3,000 மெகாவாட் சூரிய சக்தி, 550 மெகாவாட் காற்றாலை மற்றும் 1,680 மெகாவாட் 6 மணி நேரம் சேமிப்பு திறன் கொண்டது என்றார்.

இத்திட்டம் 2023ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என, கொல்லி கூறினார்.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கிரீன்கோ குழுமம் 15 மாநிலங்களில் சூரிய, காற்று மற்றும் நீர் உற்பத்தியில் 7.5 ஜிகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) நிறுவனங்களில் ஒன்றாகும்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *