உணவகங்கள் விதிக்கும் சேவைக் கட்டணங்கள் கைவிடுமாறு இந்திய தேசிய உணவக சங்கத்தை (NRAI) அரசு கேட்டுக் கொண்டுள்ளது!!!


உணவகங்கள் விதிக்கும் சேவைக் கட்டணங்கள் சட்டவிரோதமானது என்றும் இந்த நடைமுறையை உடனடியாக கைவிடுமாறும் இந்திய தேசிய உணவக சங்கத்தை (NRAI) அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சேவைக் கட்டணம் பற்றிய நுகர்வோரின் புகார்கள் குறித்து, நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் NRAI க்கு இடையே நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI), இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு (FHRAI) மற்றும் நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட உணவக சங்கங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டன.

உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களால் ஊழியர்கள், தொழிலாளர்களுக்குச் செலுத்த மெனுவில் சேவைக் கட்டணம் பயன்படுத்தப்படுகிறது மற்றும் நுகர்வோருக்கு வழங்கப்படும் அனுபவம் அல்லது உணவுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டது.

உணவு விலைகளை நிர்ணயம் செய்ய தடை இல்லை என்பதால், சேவை கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது நுகர்வோரின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.என்று NRAI தலைவர் கபீர் சூரி கூறினார்.

முன்னதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் NRAI தலைவருக்கு எழுதிய கடிதத்தில், உணவகங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவைக் கட்டணத்தை வசூலிப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *