ஏன் இப்போது வட்டியை உயர்த்தினோம் – ஆர்.பி.ஐ விளக்கம்


வட்டி உயர்வு தற்போதைய தேவை என்பதால் தான் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரே ஏன் வட்டியை உயர்த்தவில்லை என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்து வந்ததாக கூறியுள்ள அவர், ஏற்கனவே வட்டியை உயர்த்தி இருந்தால், எந்த பலனும் இருந்திருக்காது என்று கூறியுள்ளார். ஒரு வேளை வட்டியை முன்பே உயர்த்தி இருந்தால், ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக, மீண்டும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் என்று கூறிய அவர், பல்வேறு விஷயங்களை கணக்கில் கொண்டே இந்த வட்டி உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வரும் காலங்களில் எந்த வித பெரிய பிரச்சனைகளும் ஏற்படாத வகையில், பணவீக்கத்தை குறைப்பதே, இந்திய ரிசர்வ் வங்கியின் நோக்கம் என்றும் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இந்நிலையில், பணவீக்கம் அதிகமாக தொடங்கியதன் காரணமாக, படிப்படியாக வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்த தொடங்கி உள்ளது. குறிப்பாக, மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் மட்டும் 0.90 சதவிதம் வட்டியை உயர்த்திய நிலையில், சரியான நேரத்தில் தான் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.


67 responses to “ஏன் இப்போது வட்டியை உயர்த்தினோம் – ஆர்.பி.ஐ விளக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *