தள்ளுபடி விலையில் 24 கேரட் தங்க பத்திரம்


2022-23ம் ஆண்டுக்கான சீரிஸ் 1 தங்க பத்திரம் வரும் 20ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தங்க பத்திரத்தில் 24 கேரட் தங்கம் தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜூன்15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் இருந்த 24 கேரட் தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு இந்த தங்க பத்திரத்தில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 91 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு கூடுதலாக, கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க பத்திரத்தின் விற்பனை வரும் ஜூன் 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கத்தின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு, ஆண்டு வட்டியாக 2.5 சதவிதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்க பத்திரம் வாங்க விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஜூன் 28ம் தேதி முதல் அதற்கான பத்திரங்கள் வழங்கப்படும். அதே சமயம், இந்த தங்க பத்திரத்தில் டிமேட் கணக்கிலும் சேமித்து வைக்க முடியும். தங்க பத்திரம் மூலம் முதலீடு செய்யப்படும் தங்கத்தை, வங்கியில் அடகு வைத்து கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


70 responses to “தள்ளுபடி விலையில் 24 கேரட் தங்க பத்திரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *