$1 பில்லியன் ஈக்விட்டி நிதி திரட்டும் முயற்சியில் யெஸ் பேங்க்


தனியார் பங்கு நிறுவனங்களான கார்லைல் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனலிடமிருந்து யெஸ் பேங்க் $1 பில்லியன் ஈக்விட்டி நிதி திரட்டல்களை அடைவதற்கு பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலைகளில் உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத இருவர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கார்லைல் மற்றும் அட்வென்ட்டுடனான நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகத்தை அதிகரித்தன. வங்கியானது ARC க்காக JC Flowers உடன் கூட்டாளராக முடிவுசெய்தது. இருப்பினும், புதிய இயக்குநர்கள் குழுவிற்கான பங்குதாரரின் ஒப்புதலை வங்கி கோரி வருவதால் இதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகலாம்.

யெஸ் வங்கியை மீட்பதற்காக அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் ஒரு சிறப்புத் திட்டத்தை வகுத்தது. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புனரமைப்புத் திட்டத்திலிருந்து வெளியேறும் செயல்முறையைத் தொடங்கியதாக ஜூன் 8 அன்று யெஸ் வங்கி அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் குழு, மாற்று வாரியத்தை அமைக்க பரிந்துரைத்து, வங்கியின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தொடர்ந்து, பங்குதாரர்களின் ஒப்புதலைக் கோரியது. இந்த முன்மொழிவு ஜூலை 15 அன்று வங்கியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


72 responses to “$1 பில்லியன் ஈக்விட்டி நிதி திரட்டும் முயற்சியில் யெஸ் பேங்க்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *