டிஜிட்டல் ரூபாயை விரைவில் அறிமுகப்படுத்துகிறது ரிசர்வ் வங்கி


இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடையும் விதிக்கப்படவில்லை, அதை நிராகரிக்கவும் இல்லை, பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு அதீத வரியாக 30 விழுக்காடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிட்காயின்களுக்கு போட்டியாக இந்திய அரசின் கீழ் உள்ள ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது

இந்த திட்டம் இந்தாண்டே தொடங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவிக்கிறார்.

ரொக்கப்பணத்துக்கு நிகரான வகையில் பாதுகாப்பு,நம்பிக்கை, உத்தரவாதம் தரும் வகையில் இந்த டிஜிட்டல் கரன்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டுபணத்தை இந்திய ரூபாயாக மாற்றுவதும் இதில் எளிது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

கடந்த பட்ஜெட்டின்போது ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் கூறியிருந்தார். அதன்படியே அறிவிப்பு தற்போது செயல்படுத்தப்படுகிறது

இதற்காக ரிசர்வ் வங்கி சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் விரைவில் டிஜிட்டல் கரன்சிக்கான கட்டமைப்பை இறுதிசெய்ய இருக்கிறது

டிஜிட்டல் பணம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *