கூகுள் குரோம் அப்டேட் செய்துவிட்டீர்களா?


அண்மையில் கூகுள் குரோம் பயனர்களுக்கு இந்திய அரசாங்கம், சமீபத்திய புதுப்பிப்பை நிறுவ வேண்டும் என்று ‘அவசர’ எச்சரிக்கையை வெளியிட்டது.

அந்த எச்சரிக்கையின்படி, கூகுள் குரோம் உலாவியில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, அவை இலக்கு அமைப்பில் தன்னிச்சையான குறியீட்டை இயக்க ரிமோட்டுகளால் பயன்படுத்தப்படலாம் என்றும் குரோமுக்கான அதன் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பில் இந்த பாதிப்புகளுக்கான தீர்வை கூகுள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுளின் கூற்றுப்படி, சமீபத்திய குரோம் உலாவியில் 22 வகையான பாதுகாப்பு திருத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, இது பயனரின் தனியுரிமையை அதிகரிக்கும்.
அரசாங்க ஆலோசனைப்படி மற்றும் கூகுள் குரோம் பயனர்களை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க அறிவுறுத்தியது.

கூகுள் சமீபத்தில் குரோமின் நிலையான சேனலை விண்டோஸ், மேக், மற்றும் லினக்ஸ் மென்பொருட்களைப்புதுப்பித்தது, இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது என்று தெரிவித்தது.

குரோமில் கிடைக்கக்கூடிய புதுப்பிப்பை ஒருவர் சரிபார்த்து, பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைக் கிளிக் செய்வதன் மூலம் அதைப் புதுப்பிக்கலாம். குரோம் ஆப்ஷனைக் கிளிக் செய்யவும், அது புதுப்பிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு என்பது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *