மைக்ரோசாஃப்ட் மீது உலக வங்கித் தலைவர் விமர்சனம் !


மைக்ரோசாப்ட் கேமிங் டெவலப்பர், ஆக்டிவிஷன் ப்ளிஸார்டை 69 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியதை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் புதன்கிழமை விமர்சித்தார். ஏழை நாடுகள் கடன்களை மறுசீரமைக்கவும், COVID-19 மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் இது தேவையா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் நிகழ்வொன்றில் பேசியபோது “கால் ஆஃப் டூட்டி” தயாரிப்பாளரான ஆக்டிவிசன் ப்ளிஸார்டை மைக்ரோசாஃப்ட் கையகப்படுத்தல் ஒப்பந்தத்தின் மதிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார். உலக வங்கியின் நிதியமான சர்வதேச வளர்ச்சி சங்கத்திற்கு பணக்கார நாடுகளால், ஏழை நாடுகளுக்கு கடந்த டிசம்பரில் ஒப்புக் கொள்ளப்பட்ட 23.5 பில்லியன் டாலர் ரொக்க நன்கொடை பங்களிப்புகளை இது கேள்விக்குரியதாக்கி விட்டது எனவும் மால்பாஸ் கூறினார்.

கடந்த வாரம் இதே போன்ற கோரிக்கையை அவரது கருத்துக்கள் எதிரொலித்தன, இதற்கிடையில், “வளரும் நாடுகளில் உள்ள சிறு வணிகங்களுக்கு அதிக நிதியளிப்பு திறனைக் கொண்டு வர, சாதாரண உலகளாவிய முதலீட்டு வருமானத்திற்கு திரும்புவது அவசியம்,” என்று அவர் கூறினார். “அகதிகளின் இடப்பெயர்வு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பலவற்றை நிவர்த்தி செய்ய, வளரும் நாடுகளில் அதிக பணமும் வளர்ச்சியும் இருக்க வேண்டும்” என்று மல்பாஸ் மேலும் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *