ரஷ்யாவின் ரோஸ் நேபிட் (ROSNEFT) பேச்சுவார்த்தை


மற்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை ரஷ்யாவின் ரோஸ் நேபிட், உறுதி செய்துள்ளதால் இரண்டு இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை நிறுத்தியுள்ளது என்று இந்த விஷயத்தை அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தள்ளுபடிகளுடன் கச்சா எண்ணெயை ஆறு மாத விநியோகம் செய்ய வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோஸ் நேபிட்டுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

இதுவரை, நாட்டின் உயர்மட்ட சுத்திகரிப்பு நிறுவனமான ஐஓசி மட்டுமே, ரோஸ் நேபிட்டுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது,

ரஷ்ய எண்ணெய் இனி அதிக தள்ளுபடியில் கிடைக்காது என்றும், டெலிவர்டு அட் போர்ட் (DAP) அடிப்படையில் விற்பனைக்கு குறைவான சலுகைகள் கிடைக்கும் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் ரஷ்ய எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான புதிய காப்பீட்டு ஒப்பந்தங்களுக்கு உடனடித் தடை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது மற்றும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களுக்கு ஆறு மாத அவகாசம் வழங்கியது.

ஷிப்பிங் இன்சூரன்ஸ் கவரேஜ் இல்லாததால், கடந்த ஆண்டு ரோஸ் நேபிட் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஐஓசி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை பாதித்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *