28 ஆண்டுகளில் இல்லாத நடவடிக்கை – ஃப்டரல் ரிசர்வ்


அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை 0.75 சதவிதம் அதிகரித்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவிற்கு அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் வட்டியை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் அதிகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கள் செய்யும் செலவுகள் மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மிக முக்கியம் என்றும் இனி வரும் காலங்களில் மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் மீண்டும் வட்டி விகிதம் 0.75 சதவிதம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பொவெல் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள ஃப்டரல் ரிசர்வால் முடியும். ஆனால் அதற்காக, இந்த அளவிலான் பெரிய வட்டி விகித மாற்றம் பொதுவாக செய்யப்படாது என்று கூறி உள்ள அவர், அடுத்த கூட்டத்திலும், 0.5 சதவிதம் முதல் 0.75 சதவிதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று கூறினார்.

அண்மை காலமாக அமெரிக்காவில் உணவு, எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி உள்ளது.


67 responses to “28 ஆண்டுகளில் இல்லாத நடவடிக்கை – ஃப்டரல் ரிசர்வ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *