ஏற்றுமதி வரி உயர்ந்ததால் சரிவடைந்த எஃகு ஏற்றுமதி


மத்திய அரசு எஃகு பொருட்களின் மீதான ஏற்றுமதி வரியை குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு சந்தையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இரும்பு, கார்பன் ஸ்டீல் மற்றும் துருப்பிடிக்காத எஃகு ஆகிய இரண்டின் பிளாட்- ரோல் செய்யப்பட்ட பொருட்கள், பார்கள், கம்பிகள் மற்றும் கலப்படமற்ற எஃகு உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரியை அரசாங்கம் விதித்தது.

இதன் காரணமாக ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 1.5 மில்லியன் டன்களில் இருந்து ஜூலையில் 5,00,000 டன்களாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் இரும்பு தாது ஏற்றுமதி 69% குறைந்துள்ளது.

இருப்பினும், உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கவில்லை. மார்ச் மாதத்தில் சுமார் 10 மில்லியன் டன்களில் இருந்து ஒரு மாதத்திற்கு 8 மில்லியன் டன்களுக்கும் குறைவாகவே விற்பனையானது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் மே மாதம் பல பொருட்களுக்கு ஏற்றுமதி வரிகளை அரசாங்கம் விதித்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *