கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!


ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை திருத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 14 கிலோ எடையுள்ள வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்டோபர் 6) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை உயர்வின் படி, சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 915.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை 899.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையிலும் ஒரு சிலிண்டர் விலை 899.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ஒரு சிலிண்டரின் விலை 926 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி கேஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, 875 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 1 ஆம் தேதி, மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுபோல் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை கேஸ் சிலிண்டரின் விலை 215.50 ரூபாய் உயர்ந்துள்ளது. உயர்ந்து கொண்டே போகும் கேஸ் சிலிண்டரின் விலையால் நடுத்தர மக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர்.

இதேபோல், அக்டோபர் 1ஆம் தேதி தொழிலார்கள் பயன்படுத்தும் 19 கிலோ வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலையும் 43.50 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 1,876 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *