₹ 760 மதிப்பிலான ஐபிஓ வரைவைத் தாக்கல் செய்தது எலின் எலெக்ட்ரானிக்ஸ் !


எலின் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், செபியில் ₹ 760 மதிப்பிலான நிதியைத் திரட்ட ஐபிஓ வுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. ஐபிஓ வில் ₹175 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு மற்றும் அதன் தற்போதைய விளம்பரதாரர்கள் மற்றும் பங்குதாரர்களால் ₹585 கோடி வரை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவை இந்த வரைவில் இடம்பெற்றுள்ளன. இதில் பங்குதாரர்களான கமல் சேத்தியாவின் ₹32.10 கோடி, கிஷோர் சேத்தியாவின் ₹52.50 கோடி, கௌரவ் சேத்தியாவின் ₹47.40 கோடி, சஞ்சீவ் சேத்தியாவின் ₹12.20 கோடி, வசுதா சேத்தியாவின் ₹15.60 கோடி, வினய் குமார் சேத்தியாவின் ₹9.10 கோடி மதிப்புள்ள பங்குகள் அடங்கும்.

இந்த நிதி திரட்டலில் நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்த ₹80 கோடியைப் பயன்படுத்தும். செப்டம்பர் 2021 வரை ₹127.51 கோடி நிகர கடன் இருந்தது. எலின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் காஸியாபாத், உத்தரப் பிரதேசம் மற்றும் கோவாவின் வெர்னா ஆகிய இடங்களில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் ₹48.97 கோடியைப் பயன்படுத்தும்.

ஆக்சிஸ் கேபிடல் மற்றும் ஜேஎம் பைனான்சியல் ஆகியவை இந்த நிதி திரட்டுக்கான முன்னணி மேலாளர்களாக இடம் பெற்றிருக்கின்றன. நிறுவனம் மின்விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் சிறிய சமையலறை உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2021 நிதியாண்டில் ஒட்டுமொத்த சந்தை பங்காக 12% ஆகக் கொண்டுள்ளது. அதன் முதல் ஐந்து வாடிக்கையாளர்கள் பேர்க், பிலிப்ஸ், ஹாவெல்ஸ், எவெரெடி மற்றும் மால்பியோ ஆகியோர் அடங்குவர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *