கணக்கு தணிக்கையாளர் விநோத் ராய்..– கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவரானார்..!!


கல்யாண் ஜூவல்லர்ஸ் தலைவராக முன்னாள் சிஏஜி வினோத் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் டி.எஸ்.கல்யாணராமன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தொடர்வார் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 “கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் வாரியத்தின் தலைவராக வினோத் ராய்-யை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  அவர் எங்கள் குழுவில் பலதரப்பட்ட அனுபவத்தை மேலும் சேர்ப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று டிஎஸ் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.

வினோத் ராய் இந்தியாவின் முன்னாள் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் வெளிப்புற தணிக்கையாளர் குழுவின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  ராய் இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் மற்றும் இந்தியாவில் பல்வேறு வகையான சீர்திருத்தங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *