மின்சார வாகனங்களுக்கான நாடு தழுவிய பேட்டரி மாற்றுக் கொள்கையை இந்தியா இறுதி செய்ய உள்ளது


இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையை மின்மயமாக்குவதற்கான விரைவுபடுத்தும் ஆற்றலை, பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை சில நிமிடங்களில் புதியதாக மாற்றுவதில் ஆரம்பிக்கிறது

இந்தியாவில், மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரி மாற்றுதல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 2030க்குள், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வாகனங்களில் 30% மின்சாரமாக இருக்கும். மின்சார பயணிகள் கார்கள் மொத்த EV விற்பனையில் சுமார் 5% மட்டுமே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

EV க்களை அதிகரிக்கும் முயற்சியில், அரசாங்கம் மின்சார இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியங்களை அதிகரித்துள்ளது மற்றும் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கான மொத்த கொள்முதல் டெண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு EV உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறது.

’பேட்டரி பேக்’குகள் 10 கிலோகிராம் எடையில் இருந்தால் அது அனைவராலும் விரும்பத்தக்கதாக இருக்கும். மேலும் குறைந்தபட்சம் 1 கிலோவாட்-மணிநேர திறன் கொண்டதாக இருக்கும். அதனுள் லித்தியம் இரும்பு பாஸ்பேட் மற்றும் நிக்கல் மாங்கனீஸ் கோபால்ட் உள்ளிட்ட இரசாயனங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றுநிபுணர்கள் கருதுகிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *