நிலையான நிறுவனம் பாதுகாப்பான வருமானம்!


Startup

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சேருவதற்கு வெளியேறிய பல தொழிலாளர்கள், தாங்கள் சேர்ந்த புதிய நிறுவனங்கள் அவர்களையும் விரைவாக நீக்குகின்றன என்ற அச்சத்தால் தங்கள் முந்தைய நிறுவனத்தில் தொடரவே விரும்புகிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆண்டின் ஆரம்பம் வரை ஆட்சேர்ப்பு வேட்கையுடன் திரிந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சில காலாண்டுகளுக்குப் பிறகு, பணிநீக்கங்களை செய்கின்றன. பைஜூஸ், அனாகாடமி, மீஷோ, வேதாந்து, உடான், ரூபேக், கார்ஸ்24, ட்ரெல் மற்றும் ஃபர்லென்கோ உள்ளிட்ட ஸ்டார்ட்அப்களில் இருந்து சுமார் 11,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

பழைய நிறுவனங்கள் முக்கிய ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றன. ஸ்டார்ட்அப்களை விட்டு வெளியேறுபவர்களில் 15-20% பேர் தங்கள் முன்னாள் முதலாளிகளிடம் திரும்பிச் செல்கிறார்கள், மீதமுள்ளவர்கள் வெளியில் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள் மற்றும் ஓரளவு உயர்வுகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *