ஒரு வருடத்துக்கு மேல் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், கிரீன் கார்டு கேன்சல் !


அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் தொடர்ந்து ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் அது நிரந்தர குடியுரிமை அந்தஸ்தை கைவிடுவதாக கருதப்படுகிறது. (சில சிறப்பு விதிவிலக்குகள் தவிர)ஆனால், கொரானா பெருந்தொற்று போன்ற அசாதாரணமான காலங்களில் கிரீன் கார்டு விவகாரத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் ?

காலாவதியான கிரீன் கார்டு:

இந்த பிரச்சனையைக் கையாள்வதில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களை நன்கு அறிந்திருக்கின்றன. ஆனாலும் இது குறித்த தெளிவான கொள்கைகளை உருவாக்குவதில் அவர்கள் மந்தமாக இருக்கிறார்கள், 2021 மார்ச் 5-இல் அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு ( CBP) பிரிவு, வணிக விமான நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியது. USCISன் முன் அனுமதி இன்றி ( மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி என்று குறிப்பிடப்படுகிறது) ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து அமெரிக்காவிற்கு வெளியே இருந்த கிரீன் கார்டு வைத்திருப்பவர்களை அரசு குறிப்பிடும் ஆவணங்களை வைத்திருப்பவர்களை மட்டுமே விமான நிறுவனங்கள் அனுமதிக்கும்.

மார்ச் 5ஆம் தேதி CBP வழிகாட்டிகளின் கீழ், கிரீன் கார்டுகள் 10 வருட காலாவதி தேதியுடன் வழங்கப்பட்டு இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது போர்டிங் கோரிக்கைகளுக்கான உதவிக்கும் விமான நிறுவனங்கள் CBP யின் அங்கீகாரமுள்ள அதிகாரிகள் குழுவை தொடர்பு கொள்ள வேண்டும். காலாவதியான கிரீன் கார்டுகளுக்கு அமெரிக்க தூதரங்கள் பயண அனுமதிகளை (BOARDING FOIL) வழங்கியது. காலாவதியான கிரீன் கார்டுகள் குறித்த வழக்குகள் CBP யுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என இப்போதைய நடைமுறைகள் அறிவுறுத்துகின்றன.

இழந்த அல்லது திருடப்பட்ட கிரின் கார்டுகளுக்கு BOARDING FOIL கள் வழங்கப்படுகின்றன. உங்கள் கோரிக்கைகள் COVID-19 பெருந்தொற்றோடு தொடர்புள்ள நியாயமானதாக இருந்தால் நீங்கள் அமெரிக்காவிற்கு நுழைய முடியும். மேலே உள்ள அனைத்து வாய்ப்புகளும் தோல்வி அடைந்தால், நீங்கள் அமெரிக்க தூதரகத்தில் SB-1 விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த SB-1 விசாவானது உங்களை அமெரிக்காவிற்கு திரும்பி வருவதற்கும் உங்களின் கிரீன் கார்டு நிலையை தக்கவைத்துக் கொள்ளவும் அனுமதிக்கிறது.

விமானத்தில் பயணிப்பதற்குக் கூட நீங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்திருக்கலாம். நாட்டின் எல்லைகள் மற்றும் துறைமுகத்தில் இருக்கும் CBP அதிகாரிகள் சில காரணங்களுக்காக உங்கள் நுழைவு ஆவணங்களை தள்ளுபடி செய்யலாம். இறுதியில் நீங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பி வருவதற்கான, அங்கே தங்குவதற்கான காரணங்களை ஏற்கத்தக்கதா? என்று CBP தீர்மானிக்கிறது. ஆனால் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளின் காரணமாக அமெரிக்க அரசாங்கம் உங்கள் திரும்பி வருதலை ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் வெளிநாட்டில் தங்கி இருப்பதை US CIS சட்டத்தால் வழங்கப்பட்ட கால வரையறைகளை மாற்ற முடியாது.

அமெரிக்கரைத் திருமணம் செய்யாதவர்கள் இயல்பாக விண்ணப்பிக்க, நீங்கள் ஐந்து ஆண்டுகளாக கிரீன் கார்டு வைத்திருப்பவராகவும், உடல்ரீதியாக தகுதியானவராகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க குடியுரிமை சட்டம் கூறுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *