உச்சத்தை எட்டிய ரேமண்ட் பங்குகள்!


ரேமண்ட்- ன் பங்குகள் இருபத்தியோரு மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை எட்டியது, செவ்வாய்க்கிழமை அன்று நடந்த வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் அதன் மதிப்பு 576.75 ஆக இருந்தது. பிப்ரவரி 2020 க்குப் பிறகு ரேமண்ட் பங்குகள் அதன் மிக உயர்ந்த மதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக மே 2018ல் 1152 என்ற சாதனையை எட்டியுள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் கைமாறிய ரேமண்ட்டின் மொத்த பங்குகளில் 8 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5.43 மில்லியன் ஈக்குவிட்டி பங்குகளுடன் வர்த்தக அளவு கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

ரேமண்ட் ஆடை உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த உற்பத்தியாளர், மற்றும் பல்வேறு தயாரிப்பு மற்றும் சேவைகளில் ஈடுபடும் இந்திய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *