டேட்டா பேட்டர்ன் IPO !


டேட்டா பேட்டர்ன் நிறுவனம் 240 கோடி ரூபாயை திரட்டுவதற்காக ஐபிஓவை வெளியிடுகிறது. ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 5.95 மில்லியன் பங்குகளை விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது

டேட்டா பேட்டர்ன் என்பது பாதுகாப்பு மற்றும் விண்வெளி மின்னணு தீர்வுகள், செயலிகள்,சக்தி, ரேடியோ அலைவரிசைகள் மற்றும் மைக்ரோவேவ் பொதியப்பட்ட மென்பொருள் போன்ற சேவைகளை தன்னகத்தே கொண்ட நிறுவனமாகும்.

டேட்டா பேட்டர்ன் பங்குகள் டிசம்பர் 14 ந் தேதி ஆரம்பித்து, 16ந் தேதி முடிவடைகிறது. பங்கு விற்பனையின் விலையும், வாங்கும் அளவு குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும்.

திரட்டப்படும் இந்த நிதியானது கடன்களை திருப்பிச் செலுத்துதல், செயல்பாட்டு மூலதன தேவைகள், சென்னையில் உள்ள அலுவலகத்தை விரிவுபடுத்தல் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பொது நோக்கங்களுக்காக செலவிடப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *