அதிக கடன்களை தந்துள்ளோம்.. – Paytm நிறுவனம் தகவல்..!!


2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான அதன் செயல்பாட்டு திறன்கள் குறித்து Paytm நிறுவனம் செவ்வாயன்று பகிர்ந்து கொண்டது.

அதன்படி பேடிஎம் பேமெண்ட் நிறுவனம் 449 சதவீதம் கடன்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

காலாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, இதுவரை இல்லாத அளவுக்கு மாதாந்திர கடன்களை அளித்துள்ளதாகவும், பணம் செலுத்தும் வணிகத்தில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாவும் கூறியுள்ளது.

மேலும், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் மீதான ரிசர்வ் பாங்க்கின் கட்டுப்பாடுகள், தற்போதுள்ள எந்த வாடிக்கையாளர்களையும் பாதிக்காது என்றும், அவர்கள் அனைத்து வங்கி மற்றும் கட்டணச் சேவைகளையும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *