OYO தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம்.. நிர்வாகத்தை சீரமைத்த OYO..!?


உலகின்மிக பிரபலமான ஓயோ நிறுவனம்  தனது நிர்வாகத்தில் மறுசீரமைப்பை மேற்கொண்டது.

ஓயோவின் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளின் தலைமை நிர்வாக அதிகாரியான அங்கித் குப்தாவை அதன் இந்திய வணிகத்தின் தலைமை நிர்வாகியாக நியமித்துள்ளது. 

தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான ரோஹித் கபூர், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறார். தென்கிழக்கு ஆசியாவின் கூடுதல் பொறுப்பை உலகளாவிய தலைமை வணிக அதிகாரி அங்கிட் டாண்டன் ஏற்றுக்கொள்வார் என்று ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கபூர், டாண்டன் மற்றும் குப்தா ஆகியோர் ஏப்ரல் 1, 2022 முதல் தங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். என்றும் ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓயோ, தனது ஐபிஓவிற்கான ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் உயர் நிர்வாகத்தில் மாற்றங்கள் வந்துள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *