ரிலையன்ஸ் கேபிட்டலைக் கைப்பற்றிய ரிசர்வ் வங்கி !


அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிடல் குழும நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகியையும் நியமித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது ரிசர்வ் வங்கி. வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தத் தவறியது ரிலையன்ஸ் கேப்பிடல் . இதன் காரணமாக நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பணம் செலுத்துவது குறித்து நிர்வாக குழுவால் திறம்பட முடிவு செய்யமுடியவில்லை. இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிர்வாக குழு மாற்றியமைக்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நாகேஸ்வர ராவ் இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக செயல்படுவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *