55 ஏக்கர் நிலம்.. கையகப்படுத்தும் கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ்..!!


இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் லிமிடெட், ஹரியானாவின் சோனிபட்டில் சுமார் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டமானது சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்பினை வழங்குகிறது. இந்த தளம் டெல்லி எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. 

 கடந்த மாதம் சிஐஐ-அனாரோக் மாநாட்டில் உரையாற்றிய கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் லிமிடெட் எம்டி மற்றும் சிஇஓ மோஹித் மல்ஹோத்ரா, நிறுவனம் கூட்டாண்மை அமைக்க விரும்புவதாகவும், வீட்டுத் திட்டங்களின் வளர்ச்சிக்காக புதிய நகரங்களில் நுழையவும் முயற்சி செய்வதாக கூறினார்.

 நிலம் குறைவாக மதிப்பிடப்படாமல், நியாயமான மதிப்புடையதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *