நிதி நிறுவனங்களுக்கான விதி.. – திருத்தம் செய்த கார்ப்பரேட் விவகார அமைச்சகம்..!!


நிதி நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிகளில் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.

இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்கள் டெபாசிட்களை ஏற்கத் தொடங்கும் முன் அதன் ’முன் அறிவிப்பு’ கட்டாயமாகும் என்று அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NDH-4 படிவத்தில் நிறுவனங்கள் விண்ணப்பங்களைப் பெற்ற 45 நாட்களுக்குள் மத்திய அரசால் எந்த முடிவும் தெரிவிக்கப்படாவிட்டால், ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கருதப்படும் என்று திருத்தப்பட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ளது.  நிதி (திருத்தம்) விதிகள், 2022 க்குப் பிறகு இணைக்கப்படும் அத்தகைய நிறுவனங்களுக்கு இது பொருந்தும், ”என்று அறிக்கை கூறியது.

2014-2019 ஆம் ஆண்டில், 10,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இருப்பினும், சுமார் 2,300 நிறுவனங்கள் மட்டுமே NDH-4 படிவத்தில் அறிவிப்புக்கு விண்ணப்பித்துள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *