ரேஸர்பே நிறுவன மதிப்பு $ 7.5 பில்லியன் !


ரேஸர்பே நிறுவனத்தின் மதிப்பு 15 மாதங்களில் 7.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஃபின்டெக் யூனிகார்னான ரேஸர்பேயானது 7.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தொடர் எஃப் சுற்று நிதியுதவியில் 375 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது, ரேஸர்பே நிறுவனம், பேடிஎம்மிற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப் ஆகும். நிறுவனத்தின் மதிப்பீடு 15 மாதங்களில் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது, இது வால்மார்ட்டுக்குச் சொந்தமான டிஜிட்டல் கட்டண நிறுவனமான போன் பே- ஐ நாட்டின் மிகவும் மதிப்புமிக்க ஃபின்டெக் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளியது.

லோன்பைன் கேப்பிட்டல், அல்கான் கேப்பிட்டல் மற்றும் டிசிவி ஆகியவை ரேஷன் பே-இன் சமீபத்திய நிதியாளர்களாக செயல்பட்டது. டைகர் குளோபல், செக்வோயா கேபிடல் இந்தியா, ஜிஐசி மற்றும் ஒய் காம்பினேட்டர் போன்ற தற்போதைய முதலீட்டாளர்களிடமிருந்தும் இது பங்கேற்பைப் பெற்றது.

2022 இல் புதிய வங்கியியல் தீர்வுகளை வழங்கவும், புதிய நிதியைப் பயன்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் புதிய கையகப்படுத்துதல்களில் முதலீடு செய்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொடங்கி உலகம் முழுவதும் அதன் இருப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ரேஸர்பேயின் இந்த வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 600க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும் உள்ளது.

நிறுவனம் மீட்டா (முன்னாள் ஃபேஸ்புக்), ஓலா, ஸோமாட்டோ, சுவிக்கி, கிரெட், முத்தூட் ஃபைனான்ஸ், தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்தியன் ஆயில் உட்பட 8 மில்லியனுக்கும் அதிகமான வணிகங்களுக்கு பணம் கொடுக்கிறது. மேலும் 2022-இறுதிக்குள் 10 மில்லியன் வணிகங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 இல் மட்டும் யூனிகார்ன்களாக முடிசூட்டப்பட்ட 42 நிறுவனங்களில், 34 நிறுவனங்களுக்கு ரேஸர்பே பணம் செலுத்தும் தீர்வுகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஆண்டுக்கு ஆண்டு 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *