ரூ.180 கோடி கடன் நிலுவையை செலுத்த Spicejetக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்..!!


ஸ்விஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையை 3 வார காலத்துக்குள் செலுத்தும்படி Spicejet நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஸ்விஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்கள் அளித்தது தொடர்பாக, Spicejet விமான நிறுவனம் ஸ்விஸ் நிறுவனத்துக்கு ரூ.180 கோடி ரூபாய் கடன் தர வேண்டியுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், பிசியான ஏர்லைன்ஸ் நிறுவனம் என்பதால், கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கிறீர்களா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். Spicejet சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறினார். இதையடுத்து, 3 வார காலத்துக்குள் கடன் நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என Spicejet நிறுவனத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *