மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் – தங்கம் விலை உயர்வு..!!


சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 392 ரூபாய் உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் பெண்கள் கவலையடைந்துள்ளனர்.

ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையும், தங்கத்தின் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

அதன்படி, திங்கட்கிழமை அதிகரித்த தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில், இன்று புதன்கிழமை(09.03.2022) 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.392 உயர்ந்து, 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்  தங்கம் 49 ரூபாய் அதிகரித்து ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.5,569-க்கும், ஒரு சவரன் ரூ.44,553-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், 1 கிராம் வெள்ளி 1.60 காசுகள் உயர்ந்து ரூ.77.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *